வினவின் இந்த பதிவை பார்த்து மனத்தில் தோன்றியவை இங்கு கிளிக்கவும்.
படித்து முடித்ததும் மிகவும் கனமான ஒரு இன்னவென்று சொல்லமுடியாத ஒரு சூழ்நிலை உருவாகியது, பின் அவர் மேல் பெரிய கோவம் வந்தது, பின் சமூகத்தின் மேல், சிறிது நேரம் கழித்து, அந்த லிங்கத்தின் நிலையில் என்னை அமர்த்தி பார்த்தேன், நாம் இது போல் இருந்தால் என்ன செய்திருப்போம் , இதற்கு ஏதாவது பதில் உள்ளதா ... இப்படி பல விதமான கேள்விகள், எண்ண ஓட்டங்கள் ,
சாதரணமாக உடம்பு சரியில்லாமல் யாருக்காவது ஹார்ட் அட்டாக் வந்தால் , அவரை பார்த்து விட்டு வந்துவுடன் உடனே நம்மை கொஞ்ச நாளுக்கு மாற்றிக்க முயல்வோம் , கொஞ்சம் சாப்பாட்ல , கொஞ்சம் நடைபயிற்சி , அது மாதிரி நிறைய சுய பரிசோதனையை கிளறி விட்டது இந்த பதிவு
எனக்கு இன்னுமும் அவர் மேல் அடங்கா கோபம், இப்படி வாழ்க்கையை தொலைத்து நடு வீதியில் நிற்கிறாரே என்று, முதலில், ஒன்பதாவது வகுப்பில் தோல்வி, இதெல்லாம் ஒரு தோல்வியா, நண்பர்கள் கேலியை பொறுக்க முடியவில்லையே என படிப்பை நிறுத்துவது மகா பாவம் . அந்த ஆசிரியர்களாவது மக்கு , உருப்படாது போறவனே என்று பிராண்ட் பண்ணாமல் , அனுசரணையாய் பேசி ஊக்க படுத்தி இருக்கலாம் . அது மாதிரி ஆசிரியர் கிடைக்காமல் போனது, இப்போது உள்ள ஆசிரியர்களின் மன நிலையை எடுத்து காண்பிக்கிறது.
எல்லாரும் படித்து என்ன செய்கிறார்கள் என்ற விதண்டா வாதத்துக்கு என்னிடம் பதில் இல்லை.
அவருக்கு ஆசிரியர் தான் கிடைக்கவில்லை ... வீட்டுக்கு அருகில் ஒரு நாலு நல்ல வார்த்தை சொல்ல , அவரை சரியான வழியில் செலுத்த உறவினர்களோ / நண்பர்களோ இல்லாது போனது , என்ன சொல்வது , அவரது துரதிர்ஷ்டமே ... சாதரணமாக, மாவட்ட விளையாட்டு போட்டி, ஸ்டேட் லெவல், இதிலில் பங்கெடுப்பவர்கள் , அந்த உடற்பயிற்சி ஆசிரியரிடம் மிகுந்த மரியாதையுடன் இருப்பார்கள் ... இவர் யார் சொல் பேச்சை கேட்கவில்லையோ , இப்படி படிப்பை நிறுத்தினார்.
ஒன்பதாவது தோல்வி எல்லாம் ஒரு பெரிய தோல்வியே இல்லை, ( சரியாக சொன்னால் எதுவுமே ஒரு பெரிய தோல்வி அல்ல ) அதற்க்கு துவுண்டு விடுவது, வீட்டை விட்டு ஒரு இலக்கு இல்லாமல் ஓடுவது ..அது ஒரு சரியான வழி அல்ல. ..
நான் என்னோட பள்ளி இறுதியில் வெறும் 60% தான் வாங்கினேன், என் கூட படித்தவர்கள் எல்லாம் பாலிடெக்னிக் படிக்க போனார்கள் , எனக்கு அந்த மதிப்பெண்களை வைத்து ஒரு ITI யில் கூட இடம் கிடைக்காது.. எப்படியோ , என்னவெல்லாமோ நடந்து, இறுதியில் அரசினர் கலை கல்லூரியில் PUC - வணிக பிரிவில் சேர்ந்தேன் ...எப்படியோ இன்று நான் ஒரு CA .
சரி சென்னை தான் போனார் ... யாரவது சொந்தக்காரர்களோ , ஊர் காரர்களோ இருந்தார்களா? உதவி செய்ய ... சரியான உதவியும் வழி காட்டுதலும் இல்லை என்று தான் சொல்லவேண்டும் .
இந்த கோச்சிங், மென்டோர், குரு, மேலாளர் , மேனேஜர் , ஆசிரியர் .. எப்படி வேண்டுமானாலும் அழைத்து கொள்ளுங்கள் , வாழ்கையில் இவர்களுடைய பங்கு தான் பிரதானம் .
நாம் வேலை பார்க்கும் இடத்திலேயே காணலாம், ஒரு சாதாரண மேனேஜர் - ஒரு கோச் போல இருக்கும் மேனேஜர், இருவருக்கும் நிறைய வித்யாசம் உண்டு , கோச் கொடுக்கும் ஊக்கம், தன்நம்பிக்கை, அனுபவ பகிர்தல் , தோள் கொடுத்தல்... அப்படி ஒருவர் லிங்கத்துக்கு வாய்க்காதது துரதிர்ஷ்டமே ( அல்லது அவரது முயற்சி போதவில்லை )
ஆனால் அதை விட முக்கிய பங்கு இருவருக்கு உண்டு.. அது தான் அம்மா , அப்பா ..
இந்த இடத்தில ... நீங்க கணபதி மாம்பழம் சாப்பிட்ட கதையின் உள் அர்த்தத்தை எடுத்து கொள்ளலாம், அல்லது உங்களுக்கு வாழை பழத்தை உரித்து கொடுப்பது போல் உள்ள இந்த கதையின் சாரம்சத்தை புரிந்து கொள்ளலாம்.
ஒருவனுக்கு தீடீர் என்று சாமியார் ஆக வேண்டும் என்று ஒரு வெறி, வீட்டிலோ வயதான அம்மா , அப்பா ... எவ்வளவு சொல்லியும் கேட்காமல், இமய மலைக்கோ அல்லது வேறு ஏதோ மலைக்கோ போய் வேதம், யோகம், இன்னும் பல கலைகள் கற்று நிறைய சித்தி போன்ற மாயகளைகளும் கற்று வெகு நாட்களுக்கு பின் தன் ஊர் வந்தான், குளத்தில் குளித்து தூய்மையாக வந்த பொழுது, மேலே ஒரு பறவை அவன் மேல் எச்சம் இட்டது , அவனுடைய ஒரு பார்வையில் அந்த பறவை எரிந்து சாம்பலாகியது . ... பசியாகையால் , ஒரு வீட்டின் முன்பு யாசித்தான், அந்த குடும்ப தலைவியோ உடனே வந்து பார்க்க வில்லை, ஒரு முறை , இரு முறை கூப்பிட்ட பிறகு , கோபமாக அந்த பெண்மணியை பார்த்தான்... ( அந்த பறவையை பார்த்தது போல் )... அந்த பெண் புன்னகையுடன், கொக்கென்று நினைத்தாயா .... அவனுக்கு தேள் கூட்டியது போல் ஆனது ... நான் அந்த பறவையை எரித்தது எப்படி இவளுக்கு தெரியும் என்று... கேட்டு பார்த்தான், அதற்க்கு அவள், என்னை விட இதை பற்றி சொல்ல வேறு ஒருவர் இருக்கிறார் , அவர் இருப்பது கடை வீதியில்... போய் பார் என்றாள்
அங்கு போய் பார்த்தால் அவர் ஒரு பெரிய மாட்டை அறுத்து தொங்கவிட்டு , எல்லாருக்கும் வியாபாரம் செய்யும் ஒரு கசாப்பு கடை காரர். .
.". அந்த அம்மா தான் சொன்னாங்க உங்களை பார்க்கனும்னு"
"எப்படி எல்லாம் தெரியும் உங்களுக்கு" என்று கேட்டான்.
அவர் தன் கடையை மூடி , அந்த இடத்தை சுத்தமாக அலம்பி விட்டு, பின் தன் வீட்டிற்கு அவனையும் கூட்டிக் கொண்டு போனார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை இருந்தாலும் போய் பார்க்கலாமே என்று போனான்.
தன் வீட்டில் போய், மீண்டு தன்னை சுத்தம் செய்து, வீட்டில் உள்ள வயதான - கண்பார்வை அவ்வளவு இல்லாத, படுகையில் இருக்கும் தன் தாயாருக்கும் , தகப்பனுக்கும் உணவு, தண்ணீர் எல்லாம் எடுத்து , உணவை ஊட்டி பின் அவனிடம் கேட்டார்..இப்போ சொல்லு என்ன வேண்டும்
அவனுக்கு எல்லாமே புரிய தொடங்கியது ... கற்ற வித்தை, வேதம் ஒன்றுமே இல்லை, பெற்ற தாயையும் , தந்தையையும் பராமரிப்பது தான் தலையாய கடமை.. அதற்க்கு ஈடு எதுவுமே கிடையாது ...
உடனே தன் காவி வச்தரத்தை களைந்தான் ... வீட்டை நோக்கி நடந்தான் ..
எந்த அளவுக்கு அவர் அப்பா அம்மா மேல் மரியாதை வைத்திருந்தார் / வைக்கவில்லை என அந்த பதிவில் தெரிய வில்லை . அப்பா அம்மாவை வைத்து நன்றாக சோறு போட வேண்டும் என்ற ஒரு உத்வேகத்துடன் தான் பட்டினம் வந்திருப்பார்...
ஐந்து வருடமாக வீட்டுக்கு என்று பெரிதாக அல்லது சிறிதாகவோ ஒன்றும் செய்யலை என்கிறார். போய் பார்க்க கூட இல்லை என்கிறார்... இங்க கொஞ்சம் இடிக்கிது, என்ன
தான் காசு இல்லை என்றாலும் , லாரியில் ஏறி ஊரு போய் வந்திருக்கலாம் ... அப்படி பார்த்தால் அவர் வேலை செய்யும் காலங்களில் அவருடைய கூட்டு சரியில்லை என்று தான் நினைக்க வேண்டி இருக்கிறது . அந்த மாதிரி வேலை பார்க்கும் இடங்களில் , சாதரணமாக கிடைக்கும் நட்பு, குடி, பீடி , சிகரட் , பாண் பராக் ...இது மூலம் தான் தொடங்கும் , பின் நன்றாக இறுக்கி பிடித்து விடும் .
கிடைக்கும் விடுமுறையில் ..சினிமாவும் , நமீதாவும் ஆக்கிரமித்தால் அதில் இருந்து விலகி வர தெரிய வேண்டும்
சொந்தமாக தொழில் தொடங்கியவுடன் அதை விட்டு போவது இயலாத காரியம், ஓரளவுக்கு அவரின் இயலாமை புரிகிறது.
நாம் என்னை செய்தாலும், என்னை செய்ய நினைத்தாலும், ... சுய புத்தியை உபயோக படுத்த எப்போதும் தயாராய் இருக்க வேண்டும். ஒருவர் நம்மை குழியில் தள்ளப்பார்கிறாரா ... நந்தவனத்துக்கு அழைத்து செல்கிறாரா , இதையெல்லாம் ஓரளவுக்கு பார்க்க வேண்டும் . நம்மை விட அவருக்கு இந்த கடையில் எவ்வளவு வருமானம் வரும், எவ்வளவு டீ ஓடும், பால் எங்கு கிடைக்கும், என்னை விலை, எந்த நாள்ல நல்ல வியாபாரம் ..இதெல்லாம் அவர் விரல் நுனியில் இருக்கும்.
அவருடைய வாடிக்கையாளர்களை கேட்டு இருந்தால் , அவர்கள் சொல்லி இறுக்க கூடும் " வேண்டாம்பா... இது ரொம்ப அகல கால் " ... அவர் யார் சொல்பேச்சு கேட்டாரோ ..என்ன ஆசை வார்த்தைக்கு கவுந்துட்டாரோ ????
அவர் திரும்பவும் தன்னுடைய கிராமத்திற்கு சென்று தன வாழ்க்கையை மீண்டும் தொடங்க தயாரானால் , அவர் சில ஆடுகளும் நாலு பசுக்களும் வாங்கட்டும், அதில் ஒரு பசுவுக்கான விலை நான் தருகிறேன், அது போல் இன்னும் மூன்று பேர் நிச்சயம் வருவார்கள் ... அதை வைத்து அதே மாதிரி டீ கடை நடத்தலாம்.. என் அறிவுக்கு தோன்றியது ..
அந்த லிங்கம் என்னை மன்னிப்பாராக , அட்வைஸ் பண்றது, கேள்வி கேட்பது ரொம்ப சுலபம் ... ஆனால் பதில் சொல்வது ரொம்ப கஷ்டம்
வியாழன், 12 ஆகஸ்ட், 2010
செவ்வாய், 29 ஜூன், 2010
இது தான் மனித நேயம் 18+
நம் கையாலாகா தனத்தை மிக நேரடியாக , சத்தமாக , உரைக்குமாறு
சாடிவிட்டார், என்ன பெண்மணி அவர் .... என்ன தைரியம் , என்ன துணிச்சல் , .... நாம் எல்லாம் வாழ்வதற்கு ஒரு அர்த்தமே இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்
ஏதாவது செய்ய வேண்டும் , அவர் சொன்ன ஒரு வழியை (ஆவது) முதலில் பார்க்க வேண்டும்
அன்பர்களே இது பற்றி செந்தில் பதிவை பார்க்க நேரத்து ...இனி அவரின் பதிவின் லிங்க் இங்கே.
இது தான் மனித நேயம்
சாடிவிட்டார், என்ன பெண்மணி அவர் .... என்ன தைரியம் , என்ன துணிச்சல் , .... நாம் எல்லாம் வாழ்வதற்கு ஒரு அர்த்தமே இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்
ஏதாவது செய்ய வேண்டும் , அவர் சொன்ன ஒரு வழியை (ஆவது) முதலில் பார்க்க வேண்டும்
அன்பர்களே இது பற்றி செந்தில் பதிவை பார்க்க நேரத்து ...இனி அவரின் பதிவின் லிங்க் இங்கே.
இது தான் மனித நேயம்
லேபிள்கள்:
18+
ஞாயிறு, 30 மே, 2010
மாப்பிள்ளை தோழனும் தெரட்டிப்பாலும்

கல்யாண மணமகன் , மணமகள் நடுவில் மாப்பிள்ளை தோழன் (!!!???)
எங்களுக்கு என்று சொந்த ஊர் இல்லை என்ற காரணத்தாலும், சாதரணமாக நிறைய ஊர் சுற்ற வாய்ப்பு வரவில்லை என்பதாலும், போன சில ஊர்கள், பங்கு பெற்ற கல்யாணங்கள் , விழா போன்றவை மறக்க முடியாத நினைவுகளாகி போகின...
முக்கியமாக ஏதாவது ஊருக்கு என்றால் , சாதரணமாக ரயில் பயணம் இருக்கும், எனக்கு மிகவும் பிடித்தது ரயில் பயணம், பகல் நேரத்தில் என் அப்பா கையை இறுக்கி பிடித்து எங்கேயும் போக விட மாட்டார், ஆனால் இரவில் எல்லாரும் உறங்கிய பின் , அந்த படியில் நின்று பயணிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, அந்த சத்தமும், இருட்டும் , சில சமயங்களில் ஊரின் வெளிச்சமும் , நட்சத்திரங்களும் ... அது ஒரு கனா காலம் ( அப்பாடி எப்படியோ பதவின் பெயர் ஒவ்வொரு தடவையும் வந்திடுது - எவ்வளோ பாலச்சந்தர் சினிமா பார்த்திருப்போம் !!!!)
எட்டாவது லீவில், நாங்கள் நாகர்கோவிலில் உள்ள ஒழிகினசேரி என்ற கிராமத்திற்கு போனோம்... அழகான ஊர் , ப வடிவில் வீடுகள், நடுவில் பெரிய அரச மரம் மற்றும் வேப்ப மரம் ...புவனேஸ்வரி அம்மன் கோவில் , ஆறு ...ஆற்றுக்கு அந்த பக்கம் நிறைய வயல் , எப்போதுமே பச்சை பசேல், தொலை தூரத்தில் மலைகள் , ரொம்ப ரம்யமான சிறிய ஊரு .



ஒழிகினசேரியில் இருந்து தெரியும் சில காட்சிகள்
அந்த கால கட்டத்தில் நிறைய உறவினர்கள் ஒழிகினசேரியில் இருந்தார்கள் , யார் வீட்டுக்கு வேணுமானாலும் எப்போதும் போகலாம் , நீச்சல் தெரியுமாதலால் ஆற்றங்கரையும் உண்டு
அப்போது அங்கிருந்த என்னோட கசின் தாத்தாவிடம் ( ..ஒன்று விட்ட தாத்தா ) ஒரு புத்தக சாலை இருந்தது , வெத்தலை பெட்டியோட தடித்த கண்ணாடி போட்டு, கம்பீரமாக இருப்பார் , என்னோட பாதி பேரு அவரோட பெயரில் இருந்து வந்தது தான் ( சுந்தர்) , அந்த காலத்திலேயே டென்னிஸ் விளையாடினார் என்று சொல்வார்கள் , நான் பார்த்தபொழுது , கலர் கலர் டோக்கன் வைத்து சீட்டுக்கட்டு தான் விளையாடினார்.!!!.
ஊருக்கு போகும் வழியில் ஒரு பெரிய வீடு உண்டு - அது என்.எஸ்.கிருஷ்ணனின் வீடு என்று சொல்வார்கள் - பயோனியர் முத்து என்ற திரை அரங்கமும் அருகில் உண்டு ( அப்ப தான் இன்று போல் என்றும் வாழ்க - தலைவர் படம் பார்த்தேன் )
அங்கிருந்து , சுசீந்தரம் கோவில் பார்த்தது, கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமனம் பார்த்தது, காந்தி மண்டபம், கோவில் ... அங்கு வாங்கிய அந்த கண்ணாடி துண்டுகளை குழல் மூலம் பார்க்கும் அந்த குழாய் நெடு நாட்களுக்கு என்னிடம் இருந்தது
எனக்கு ஒரு வகையில் அண்ணன் முறை உள்ள திரு ராமசுவாமிக்கு திருமணம் , நான் திருச்சி டவுன்ஷிப்பில் இருந்து போய் இருப்பதால் , அந்த கிராமத்து வீடுகள், அமைப்பு, எல்லாமே புதிது ... அந்த ஊர் பயலுவுகளும் , எலேய் , என்னலேய் ன்னு வார்த்தைக்கு வார்த்தை " லேய் " போட்டு பேசுவதை பார்க்கும் பொழுது ஒரு புது அனுபவம் எல்லாரும் எலும்பும் தோலுமாய் தான் இருப்பார்கள், பெரிய விளையாட்டு உபகரணங்கள் ஏதும் கிடையாது, ஆனாலும் எப்பொழுதும் விளையாடி கொண்டிருந்தோம் ..
அது மாதிரி ஒளிஞ்சு பிடிச்சு விளையாடும் பொழுது, நான் சொன்ன ராமஸ்வாமி வீட்டில், சமையல் அறைக்கு பக்கத்தில் ஓர் அறை உண்டு, சின்ன ஸ்டோர் ரூம் மாதிரி, ஜன்னல் கிடையாது, சிறியது, ஒரே பாத்திரமும், அரிசி , பருப்பும் இருக்கும் ... நான் அதில் ஒளிந்து கொண்டேன், யாரோ அந்த ரூமை வெளியில் இருந்து பூட்டி விட்டார்கள்.
அந்த காலகட்டத்தில் , எப்போவாவது சில சமயம், பிஸ்கட் சாப்பிட்டிருப்போம், ஐஸ் கிரீம் , மற்றும் கடையில் வாங்கிய ஸ்வீட் எல்லாம் பார்த்தது கூட கிடையாது, பண்டிகை காலங்களில் அம்மா செய்யும் அப்பம், பொறி உருண்டை , அவல் இதுவே நான் பார்த்த /உண்ட ஸ்வீட் வகைகள் - அம்மா நன்றாக மைசூர் பாகும் செய்வார்கள்
கல்யாண வீடு என்பதால், கல்யாணத்துக்கு உண்டான முறுக்கு, பட்சணம் எல்லாம் அங்கு தான் இருந்தது ... முதல்ல கொஞ்சம் முறுக்கு , அப்பறம் கொஞ்சம் மனோகரம் இதெல்லாம் சாப்பிட தொடங்கினேன் .. அப்பா தான் அந்த சின்ன எவர்சில்வர் சம்படம் கண்ணில் பாட்டது... திறந்து பார்த்தால் , அதில் தெரட்டிபால் ... ஆஹா அதை கொஞ்சம் சாப்பிட்டேன், அப்பறம் ஒரு எவர்சில்வர் தூக்கு இருந்தது, அதற்குள் சிவப்பு தெரட்டி பால் ... செமை ஜாலியா இருந்தது, அப்பறம் வேற எதுக்கோ யாரோ கதவை திறக்கும் பொழுது , வெளியில் போனேன் . கல்யாணத்துக்கு தெரட்டி பால் திரும்பவும் செய்தார்கள் என நினைக்கிறேன்

அந்த கல்யாணத்தில் நான் தான் மாப்பிள்ளை தோழன், எனக்கு ஐந்து ருபாய் கொடுத்தார்கள் , அம்மாவிடம் கொடுத்துவிட்டேன், என் நினைவுக்கு தெரிந்த வரை, அந்த காலத்துல எனக்கு கிடைத்த அதிக பட்ச ரூபாய் இது தான்.
இப்பொழுது கூட அதை நினைவில் வைத்து, ஒழிகினசேரியில் உள்ள என் மனைவியின் பாட்டி , ( என் தாயாரின் சகோதரியும் கூட ), தன மற்றுமொரு பேத்தியின் கல்யாணத்தில் செய்த தெரட்டி பால் கொடுத்தனுப்பினார்கள் .... ரொம்ப சுவையும் / அன்பும் கலந்திருந்தது .

திருச்சந்தூரில் என் மாமன் மகன் திரு ராம மூர்த்தியின் திருமணம்
இடது கோடியில் என் அம்மா , அப்பா , அப்புறம் மாமா , மாமி , மாமா பையன்கள் , நான், மற்றும் கல்யாண பையனின் சர்தார்ஜி நண்பன்
இப்போ படிச்சு, ஊரு விட்டு ஊரு வந்து, எங்கெல்லாமோ சுற்றும் வாய்ப்பு உண்டு, ஆனால் எப்போதுமே அந்த ஸ்வீட் சாப்பிடும் பொழுது அம்மாவின் நினைப்பு என்னை அறியாமல் வந்து விடும், அம்மா ஏதாவது கல்யாணத்துக்கு / விசேஷத்திற்கு போனால் கூட, இலையில் விழும், மைசூர் பாகு / லட்டு போன்றவைகளை புடவையில் முடிந்து வீட்டிற்கு வந்து எனக்கு கொடுப்பார்.
லேபிள்கள்:
ஒழிகினசேரி,
கல்யாணம்,
ஸ்வீட்
திங்கள், 24 மே, 2010
வித்யாசமான வியாதி - பெங்களூரு நினைவுகள்
ஒரு சில பேருக்கு , வித்யாசமான வியாதி வந்திருக்கும், எனக்கு வந்தது கொஞ்சம் நிறையவே விதயாசமானது....
அது ஒரு கனா காலம், கல்யாணம் ஆன புதிது, பெங்களூர் வாசம், எல்லாரும் என்ன செய்றீங்க , எங்க வேலை என்று கேட்டால், நான் ப்ராக்ட்டிஸ் பண்றேன்னு சொல்வேன் ( CA பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தேன் ) ...
வீடு ரொம்ப சிறிய வீடு , ஆனால் எப்போதும் உறவினர்கள் / நண்பர்கள் கூட்டம் உண்டு. கவாசாகி பைக் இருந்தது, நல்ல சூடான இட்லி, வடை, அடிக்கடி பை டு காபி ( 1 /2 காபி ) .... வார இறுதியில் மனோரஞ்சன் என்கின்ற ஒரு Air- Force திரை அரங்கில் நிறைய சினிமா ... வாய்ப்பு கிடைத்தால் மறுபடியும் இம்மி பிசகாமல் அதே வாழ்க்கை வாழ வேண்டும்.

அப்பெல்லாம் இளநீர் நிறைய கிடைக்கும், அது நிறைய குடிக்கும் பழக்கம் இருந்தது ( பீர் குடிக்க மாட்டேன் !!!!!) ...
என் மனைவி IATA பரிட்சை பாஸ் பண்ணியதால், பெங்களூர் K .C . தாஸ் என்கிற ஸ்வீட் கடையில் இருந்து ரெண்டு கிலோ சோன் பாப்படி வாங்கினேன் , அந்த சோன் பாப்படி கல்கத்தாவில் செய்து , விமானம் மூலம் பெங்களூரு வரும் என்று கேள்வி, எவ்வளவு உண்மை என்று தெரியாது.

ஒரு சில பேருக்கு கொடுத்தது போக ஒரு ஒன்றரை கிலோ மீதி இருந்தது, அன்று இரவு, தனி ஆளாக எல்லா சோன் பாப்டியை காலி செய்தேன், ...விடியற் காலை முழிப்பு வந்தது, ஆனால் காலை அசைக்க முடியவில்லை, கையை அசைக்க முடியவில்லை, போர்வையை எடுத்து போர்த்தி கொள்ள முடியவில்லை, கொஞ்சம் பேசமால் படுத்து இருந்தேன், தெரிந்த பாடல் வரிகளை பாடி பார்த்தேன்.... மனம் /மூளை எல்லாம் ஓகே ஆனால் கால் /கை இம்மி கூட அசைக்க முடியவில்லை ...இப்படியே இருந்தா அவ்வளவு தான், இனி மனைவியிடம் சொல்லிட வேண்டியது தான்னு குரல் கொடுத்தேன்,

அசைய முடியாம இருந்த என்னை அப்படி பார்த்தவுடன் அழ ஆரம்பித்து விட்டாள் , மாமனாரும் அன்று வீட்டில் தங்கி இருந்தார், என்ன சத்தம் என்று அவரும் வந்தார், ..... எனக்கு ஒன்னும் இலலை, ஞாபக சக்தி எல்லாம் நல்லா தான் இருக்குன்னு சொல்லிட்டு ... பார்முலா ஒன்னு , (a+b)2 = a2 +b2 + 2ab ன்னு சொல்றேன் , அவ்வளவு தான் இவருக்கு என்னோவோ ஆச்சுன்னு , மனைவி இன்னும் கொஞ்சம் அழரா,
நிக்க கூட முடியாது, ரெண்டு கையும் / காலும் கிட்ட தட்ட பராலிசிஸ் வந்தா மாதிரி ... அப்படியே தூக்கி கொண்டு போய் ஒரு வழியா ஆட்டோவில் ஏற்றி, ஆஸ்பிடல் கொண்டு போய் சேர்த்தார்கள், காலை நேரம் என்பதால் அப்போதுள்ள டாக்டர், ஒரு ட்ரிப் ஏத்த சொல்லிவிட்டு போய் விட்டார், அடுத்த டாக்டர் வர ஒரு 9 மணியானது , அவர் வந்தவுடன் சில பரிசோதனைகள் செய்தார், ஆனால் இப்போது என்னால் நிற்க , நடக்க முடிகிறது , என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.... படுத்துக்கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்த நான், சாதரணமாக நடந்து வெளியே வந்தேன் ...இருந்தாலும் அந்த சோதனைகளில் , எனக்கு பொட்டாசியம் அளவு குறைந்ததால் இப்படி இருக்கலாம் என்றும், பொட்டாசியம் சாப்பாடு மூலம் கிடைப்பது மிக கடினம், இளநீர் மற்றும் வாழை பழத்தில் பொட்டாசியம் உண்டு என்று சொன்னார்.
அது அப்படியே போச்சு, ஆனால் அப்போப்போ இளநீர் மட்டும் நிறைய குடித்து கொண்டு வந்தேன்,
எங்கள் வீட்டில் தங்கி ப்ராஜெக்ட் வொர்க் செய்த , எங்கள் கசின் கல்யாணம் நிச்சயம் ஆகியது, அதற்க்கு பார்ட்டி கொடுத்த பொழுது, சிம்பொனி சினிமா ஹால் அருகே ஒரு ஐஸ் கிரீம் கடைக்கு போனோம், அந்த மெனு கார்டில் என்னென்னமோ ஐட்டம்ஸ் எல்லாம் இருந்தது , எப்பவும் போல நம்பளோட வழக்க படி, இருக்கறதிலேயே ஜாஸ்தி விலை உள்ள Death by Chocalate ங்கிர ஒரு ஐஸ் கிரீம் ஆர்டர் பண்ணி சாப்பிட்டேன் ( முன்ன பின்ன கேள்வி பட்டது கூட கிடையாது - விலை ஓன்று தான் குறி நமக்கு )

அதுல ரெண்டு பெரிய சாக்லேட் பேஸ்ட்ரி , அதன் மேல் ரெண்டு கரண்டி வனிலா ஐஸ் கிரீம், அதன் மேல வழியும் தேன், அப்புறம் அதன் மேல் தூவி விட்ட ட்ரை ப்ரூட்ஸ்.... அப்போ அதன் விலை 78 ரூபாய்ன்னு நினைக்கிறேன் ... அதை புல்லா சாப்டறதுக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டேன் ..அது ஒரு சுகமான சுமை.
அன்று இரவே என் மனைவி கல்யாண கோஷ்டியுடன் போய், புடவை வாங்க சென்னை போனாள், நான் தனியாக வீடு வந்து சேர்ந்தேன்... அவ்வளவு தான் காலையில் எழும்ப முடிய வில்லை, யார் /எப்படி கொண்டு போனார்கள் என்று சரியாக ஞாபகம் இலலை, வீடு பக்கத்தில் உள்ள ராமையா மருத்துவ மனைக்கு போனோம்,
ராமையா மருத்துவமனை, மெடிக்கல் காலேஜ் , இன்ஜினியரிங் காலேஜ் எல்லாம் சேர்ந்து இருக்கும், ரொம்ப பெரிய இடம், என்னை அட்மிட் பண்ணிய ரூம் என் வீட்டை விட குறைந்தது ஆறு மடங்கு பெரிது, ரூம் உள்ளில் தூண்கள் எல்லாம் வரும். நான் மட்டும் தனி ஆள்,

கட்டிடம் கட்டி கொண்டிருந்தால் ராமையாவின் ஆயுளுக்கு ஒன்றும் நேராது என்று யாரோ ஒரு ஜோஸ்யர் சொன்னதால் , எப்போதும் கட்டிட பனி தான், அவரோட வீடு கூட விதான் சௌதா மாதிரி இருக்கும் .... ராத்திரி அவ்வளவு பெரிய ரூமில் தனியாக இருந்ததால், ஒரு மாதிரி பயம் வந்து , பயத்திலேயே தூங்கி விட்டேன், முழித்து பார்த்தால் ரூம் உள்ள இரண்டு புதிய தூண்கள் !!!!!!
அவர்களும் என்னோவோ டெஸ்ட் எல்லாம் செய்தார்கள், என் கண் கொஞ்சம் பெரிதாக , வெளியே தள்ளி இருப்பதால் ( அதாவது திருட்டு முழி !!!!!) தைராய்டு பரிசோதனையும் செய்தார்கள் , அதற்க்கு அவர்கள் வசூலித்த பணம் ருபாய் ஐந்து மட்டுமே .....அந்த ரிப்போர்ட்டை வாங்க போன போது, ஒரு பேப்பர் எடுத்து ஏதோ கிறுக்கி, உங்கள்ளுக்கு தைராய்டு கிடையாது என்று சொல்லிவிட்டார்.
அவ்வளவு தான் வீட்டிற்கு வந்து விட்டோம், இப்போ சமையலில் , சாப்பாடில் நிறைய மாற்றம், ஸ்வீட் கிடையாது, இலை, தழை, பச்சை காய்கறி ..இப்படின்னு கொஞ்ச நாள் ஓடியது
வேலை மாறி மும்பை வந்தோம், இங்கிலாந்தில் இருந்து வந்த ஒரு உறவினர் இதை பற்றி கேள்வி பட்ட பொழுது, ஸ்வீட் போன்றவை ஏன் சாபிடாமல் இருக்கணும், அதற்க்கான காரணம் என்ன ... இதெல்லாம் கண்டுபிடிக்க நல்ல மருத்துவரை போய் பார்க்கவும் என்று சொல்லிவிட்டு போனார்.
முதலில் ஒரு நியூரோ மருத்துவரிடம் போனோம், எல்லாம் சரியாய் இருக்கு என்று சொல்லிவிட்டு ஒரு என்டோகார்ணலாஜி மருத்துவரிடம் அனுப்பினார்.
அவர் இந்த இந்த டெஸ்ட்களை மும்பை ஹிந்துஜா ஆஸ்பிடல் போய் செய்து வரவும் என்று சொன்னார். அதே தைராய்ட் டெஸ்ட் தான், ஆனால் அதற்க்கான கட்டணம், கிட்ட தட்ட ஆயரம் ருபாய் , இப்போ இதில் தைராய்டு உள்ளது - என்று ரிப்போர்ட் சொல்லியது
இதனால் தெரிந்து கொண்டது
(1)ஒன்றரை கிலோ ஸ்வீட் எல்லாம் தனியாக ஒரு ஆள் சாப்பிட கூடாது -
(2)மெனு கார்டில் உள்ள ஐட்டத்தின் விலையை விட எது வேண்டுமோ அதை வாங்கி சாப்பிடனும் -
(3)ஐந்து ருபாய் டெஸ்ட் க்கும் , ஆயரம் ருபாய் டெஸ்ட் க்கும் குறைந்த பட்சம் ஆறு வித்யாசம் உண்டு.


எனக்கு வந்த ஒரு மெயில்..
இளவரசர் சார்லஸும் , ஒரு சர்தாரும் உணவருந்தி கொண்டிருக்கிறார்கள் ... இளவரசர், சர்தார்ஜியை பார்த்து, PLEASE PASS ON THE WINE YOU DIVINE ன்னு சொல்றார் , சர்தார்ஜி உச்சி குளிர்ந்து போய் அதை எடுத்து கொடுக்கிறார் , நீங்கள் சொல்வது ஏதோ ஒரு கவிதை போல் சுகமாக இருக்கிறது ... மனத்தில் ஏதோ கணக்கு போடுகிறார், மேசையில் இருப்பதை எல்லாம் ஒரு தரம் பார்கிறார், பின் தனக்குள் ஏதோ சிரிக்கிறார்.... சிறிது நேரம் கழித்து இளவரசரை பார்த்து PLEASE PAAS THE CUSTARD YOU BASTARD $#@%*&
அது ஒரு கனா காலம், கல்யாணம் ஆன புதிது, பெங்களூர் வாசம், எல்லாரும் என்ன செய்றீங்க , எங்க வேலை என்று கேட்டால், நான் ப்ராக்ட்டிஸ் பண்றேன்னு சொல்வேன் ( CA பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தேன் ) ...
வீடு ரொம்ப சிறிய வீடு , ஆனால் எப்போதும் உறவினர்கள் / நண்பர்கள் கூட்டம் உண்டு. கவாசாகி பைக் இருந்தது, நல்ல சூடான இட்லி, வடை, அடிக்கடி பை டு காபி ( 1 /2 காபி ) .... வார இறுதியில் மனோரஞ்சன் என்கின்ற ஒரு Air- Force திரை அரங்கில் நிறைய சினிமா ... வாய்ப்பு கிடைத்தால் மறுபடியும் இம்மி பிசகாமல் அதே வாழ்க்கை வாழ வேண்டும்.

அப்பெல்லாம் இளநீர் நிறைய கிடைக்கும், அது நிறைய குடிக்கும் பழக்கம் இருந்தது ( பீர் குடிக்க மாட்டேன் !!!!!) ...
என் மனைவி IATA பரிட்சை பாஸ் பண்ணியதால், பெங்களூர் K .C . தாஸ் என்கிற ஸ்வீட் கடையில் இருந்து ரெண்டு கிலோ சோன் பாப்படி வாங்கினேன் , அந்த சோன் பாப்படி கல்கத்தாவில் செய்து , விமானம் மூலம் பெங்களூரு வரும் என்று கேள்வி, எவ்வளவு உண்மை என்று தெரியாது.

ஒரு சில பேருக்கு கொடுத்தது போக ஒரு ஒன்றரை கிலோ மீதி இருந்தது, அன்று இரவு, தனி ஆளாக எல்லா சோன் பாப்டியை காலி செய்தேன், ...விடியற் காலை முழிப்பு வந்தது, ஆனால் காலை அசைக்க முடியவில்லை, கையை அசைக்க முடியவில்லை, போர்வையை எடுத்து போர்த்தி கொள்ள முடியவில்லை, கொஞ்சம் பேசமால் படுத்து இருந்தேன், தெரிந்த பாடல் வரிகளை பாடி பார்த்தேன்.... மனம் /மூளை எல்லாம் ஓகே ஆனால் கால் /கை இம்மி கூட அசைக்க முடியவில்லை ...இப்படியே இருந்தா அவ்வளவு தான், இனி மனைவியிடம் சொல்லிட வேண்டியது தான்னு குரல் கொடுத்தேன்,

அசைய முடியாம இருந்த என்னை அப்படி பார்த்தவுடன் அழ ஆரம்பித்து விட்டாள் , மாமனாரும் அன்று வீட்டில் தங்கி இருந்தார், என்ன சத்தம் என்று அவரும் வந்தார், ..... எனக்கு ஒன்னும் இலலை, ஞாபக சக்தி எல்லாம் நல்லா தான் இருக்குன்னு சொல்லிட்டு ... பார்முலா ஒன்னு , (a+b)2 = a2 +b2 + 2ab ன்னு சொல்றேன் , அவ்வளவு தான் இவருக்கு என்னோவோ ஆச்சுன்னு , மனைவி இன்னும் கொஞ்சம் அழரா,
நிக்க கூட முடியாது, ரெண்டு கையும் / காலும் கிட்ட தட்ட பராலிசிஸ் வந்தா மாதிரி ... அப்படியே தூக்கி கொண்டு போய் ஒரு வழியா ஆட்டோவில் ஏற்றி, ஆஸ்பிடல் கொண்டு போய் சேர்த்தார்கள், காலை நேரம் என்பதால் அப்போதுள்ள டாக்டர், ஒரு ட்ரிப் ஏத்த சொல்லிவிட்டு போய் விட்டார், அடுத்த டாக்டர் வர ஒரு 9 மணியானது , அவர் வந்தவுடன் சில பரிசோதனைகள் செய்தார், ஆனால் இப்போது என்னால் நிற்க , நடக்க முடிகிறது , என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.... படுத்துக்கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்த நான், சாதரணமாக நடந்து வெளியே வந்தேன் ...இருந்தாலும் அந்த சோதனைகளில் , எனக்கு பொட்டாசியம் அளவு குறைந்ததால் இப்படி இருக்கலாம் என்றும், பொட்டாசியம் சாப்பாடு மூலம் கிடைப்பது மிக கடினம், இளநீர் மற்றும் வாழை பழத்தில் பொட்டாசியம் உண்டு என்று சொன்னார்.
அது அப்படியே போச்சு, ஆனால் அப்போப்போ இளநீர் மட்டும் நிறைய குடித்து கொண்டு வந்தேன்,
எங்கள் வீட்டில் தங்கி ப்ராஜெக்ட் வொர்க் செய்த , எங்கள் கசின் கல்யாணம் நிச்சயம் ஆகியது, அதற்க்கு பார்ட்டி கொடுத்த பொழுது, சிம்பொனி சினிமா ஹால் அருகே ஒரு ஐஸ் கிரீம் கடைக்கு போனோம், அந்த மெனு கார்டில் என்னென்னமோ ஐட்டம்ஸ் எல்லாம் இருந்தது , எப்பவும் போல நம்பளோட வழக்க படி, இருக்கறதிலேயே ஜாஸ்தி விலை உள்ள Death by Chocalate ங்கிர ஒரு ஐஸ் கிரீம் ஆர்டர் பண்ணி சாப்பிட்டேன் ( முன்ன பின்ன கேள்வி பட்டது கூட கிடையாது - விலை ஓன்று தான் குறி நமக்கு )

அதுல ரெண்டு பெரிய சாக்லேட் பேஸ்ட்ரி , அதன் மேல் ரெண்டு கரண்டி வனிலா ஐஸ் கிரீம், அதன் மேல வழியும் தேன், அப்புறம் அதன் மேல் தூவி விட்ட ட்ரை ப்ரூட்ஸ்.... அப்போ அதன் விலை 78 ரூபாய்ன்னு நினைக்கிறேன் ... அதை புல்லா சாப்டறதுக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டேன் ..அது ஒரு சுகமான சுமை.
அன்று இரவே என் மனைவி கல்யாண கோஷ்டியுடன் போய், புடவை வாங்க சென்னை போனாள், நான் தனியாக வீடு வந்து சேர்ந்தேன்... அவ்வளவு தான் காலையில் எழும்ப முடிய வில்லை, யார் /எப்படி கொண்டு போனார்கள் என்று சரியாக ஞாபகம் இலலை, வீடு பக்கத்தில் உள்ள ராமையா மருத்துவ மனைக்கு போனோம்,
ராமையா மருத்துவமனை, மெடிக்கல் காலேஜ் , இன்ஜினியரிங் காலேஜ் எல்லாம் சேர்ந்து இருக்கும், ரொம்ப பெரிய இடம், என்னை அட்மிட் பண்ணிய ரூம் என் வீட்டை விட குறைந்தது ஆறு மடங்கு பெரிது, ரூம் உள்ளில் தூண்கள் எல்லாம் வரும். நான் மட்டும் தனி ஆள்,

கட்டிடம் கட்டி கொண்டிருந்தால் ராமையாவின் ஆயுளுக்கு ஒன்றும் நேராது என்று யாரோ ஒரு ஜோஸ்யர் சொன்னதால் , எப்போதும் கட்டிட பனி தான், அவரோட வீடு கூட விதான் சௌதா மாதிரி இருக்கும் .... ராத்திரி அவ்வளவு பெரிய ரூமில் தனியாக இருந்ததால், ஒரு மாதிரி பயம் வந்து , பயத்திலேயே தூங்கி விட்டேன், முழித்து பார்த்தால் ரூம் உள்ள இரண்டு புதிய தூண்கள் !!!!!!
அவர்களும் என்னோவோ டெஸ்ட் எல்லாம் செய்தார்கள், என் கண் கொஞ்சம் பெரிதாக , வெளியே தள்ளி இருப்பதால் ( அதாவது திருட்டு முழி !!!!!) தைராய்டு பரிசோதனையும் செய்தார்கள் , அதற்க்கு அவர்கள் வசூலித்த பணம் ருபாய் ஐந்து மட்டுமே .....அந்த ரிப்போர்ட்டை வாங்க போன போது, ஒரு பேப்பர் எடுத்து ஏதோ கிறுக்கி, உங்கள்ளுக்கு தைராய்டு கிடையாது என்று சொல்லிவிட்டார்.
அவ்வளவு தான் வீட்டிற்கு வந்து விட்டோம், இப்போ சமையலில் , சாப்பாடில் நிறைய மாற்றம், ஸ்வீட் கிடையாது, இலை, தழை, பச்சை காய்கறி ..இப்படின்னு கொஞ்ச நாள் ஓடியது
வேலை மாறி மும்பை வந்தோம், இங்கிலாந்தில் இருந்து வந்த ஒரு உறவினர் இதை பற்றி கேள்வி பட்ட பொழுது, ஸ்வீட் போன்றவை ஏன் சாபிடாமல் இருக்கணும், அதற்க்கான காரணம் என்ன ... இதெல்லாம் கண்டுபிடிக்க நல்ல மருத்துவரை போய் பார்க்கவும் என்று சொல்லிவிட்டு போனார்.
முதலில் ஒரு நியூரோ மருத்துவரிடம் போனோம், எல்லாம் சரியாய் இருக்கு என்று சொல்லிவிட்டு ஒரு என்டோகார்ணலாஜி மருத்துவரிடம் அனுப்பினார்.
அவர் இந்த இந்த டெஸ்ட்களை மும்பை ஹிந்துஜா ஆஸ்பிடல் போய் செய்து வரவும் என்று சொன்னார். அதே தைராய்ட் டெஸ்ட் தான், ஆனால் அதற்க்கான கட்டணம், கிட்ட தட்ட ஆயரம் ருபாய் , இப்போ இதில் தைராய்டு உள்ளது - என்று ரிப்போர்ட் சொல்லியது
இதனால் தெரிந்து கொண்டது
(1)ஒன்றரை கிலோ ஸ்வீட் எல்லாம் தனியாக ஒரு ஆள் சாப்பிட கூடாது -
(2)மெனு கார்டில் உள்ள ஐட்டத்தின் விலையை விட எது வேண்டுமோ அதை வாங்கி சாப்பிடனும் -
(3)ஐந்து ருபாய் டெஸ்ட் க்கும் , ஆயரம் ருபாய் டெஸ்ட் க்கும் குறைந்த பட்சம் ஆறு வித்யாசம் உண்டு.


எனக்கு வந்த ஒரு மெயில்..
இளவரசர் சார்லஸும் , ஒரு சர்தாரும் உணவருந்தி கொண்டிருக்கிறார்கள் ... இளவரசர், சர்தார்ஜியை பார்த்து, PLEASE PASS ON THE WINE YOU DIVINE ன்னு சொல்றார் , சர்தார்ஜி உச்சி குளிர்ந்து போய் அதை எடுத்து கொடுக்கிறார் , நீங்கள் சொல்வது ஏதோ ஒரு கவிதை போல் சுகமாக இருக்கிறது ... மனத்தில் ஏதோ கணக்கு போடுகிறார், மேசையில் இருப்பதை எல்லாம் ஒரு தரம் பார்கிறார், பின் தனக்குள் ஏதோ சிரிக்கிறார்.... சிறிது நேரம் கழித்து இளவரசரை பார்த்து PLEASE PAAS THE CUSTARD YOU BASTARD $#@%*&
ஞாயிறு, 23 மே, 2010
டெல்லி நினைவுகள் - வயதான துறவி !!!!!!
டெல்லி நினைவுகள் - வயதான துறவி !!!!!!
CA பரிச்சை என்றால் சும்மாவா , ரொம்ப கஷ்டம் அப்படின்னு சொல்வேன்னு தானே எதிர்பாத்தீங்க ....கஷ்டம் எல்லாம் கிடையாது, ஆனால் அடிக்கடி பெயில் ஆகணும் ..பெயில் ஆனா சோகம் தானே ... அதுக்குகாக உக்காந்து அடிப்பாங்க. நான் அப்பவும் ( பெயில் ஆனப்பவும் ) அதை தொட்டது கிடையாது , CA pass ஆகாம அதெல்லாம் சாப்பிட கூடாதுன்னு ஒரு கொள்கை ...ஆனா, இந்த பாழாய் போன CA அவ்வளவு சுலபம் கிடையாது, அப்பொழுது என் நண்பன் ஒருவன் வீட்டிற்கு அடிக்கடி போவதுண்டு, அவன் அண்ணன் air -force இல இருந்ததால் எப்பவும் பாட்டில் இருக்கும் , நிறைய நாள் நானும், என்னை போல் வேறு ஒரு நண்பனும் தினம் அவர்கள் வீட்டுக்கு போவோம் ... பின் மூன்று பெரும் சில சமயம் அங்கு உள்ள கமல் தியேட்டரில் சினிமா பார்த்து விட்டு ஒரே கட்டிலில் ( நாங்க மூணு பேர் மட்டுமே !!!!!) படுத்து உறங்கவோம். ..( அது ஒரு கனா காலம் )...

நான் பள்ளியில் படித்த காலத்தில் ... யாராவது பீடி /சிகரெட் குடித்தாலே அது தான் மெயின் நியூஸ் , மொத்தப் பள்ளியில் ஒரு ரெண்டு அல்லது மூன்று பேர் அது போல் இருப்பார்கள், அவங்களை எல்லாம் அண்ணாந்து தான் பார்ப்போம் .
கல்லூரி வாழ்க்கையிலும் , அந்த பக்கம் போகலை, கையில் அவ்வளாவாக காசு புழக்கம் கிடையாது ( ஏன்டா பொய் சொல்ற - காசே கிடையாது ) .. தஞ்சாவூர் கிராமத்தில் இருந்து வரும் சிலர் சரக்கு அடிப்பார்கள் ..
கல்லூரிக்கு பிறகு , அந்த CA நாட்களில் , என் நண்பன் CA பாஸ் செய்து விட்டான், அதற்காக ஒரு பெரிய பார்ட்டி , ஆனால் நான் இன்னும் பாஸ் ஆக வில்லை ஒரு குரூப் பைனலில் இன்னும் பாக்கி இருந்தது. கொள்கையை தூர போட்டுவிட்டு நானும் தொடங்கினேன். முன்ன பின்ன குடித்து கிடையாது , பீர் , விஸ்கி எலாம் பயங்கர ஸ்மெல், எனவே வயதான துறவியை நாடினேன் (Old monk) ... அதுல நிறைய ஐஸ் போட்டு, தமஸ் அப் கலந்து சும்மா பூந்து விளையாடினோம். எம் ஜி ஆர், பாட்டு ( நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு - ஆட்டமுடன் , ஆயிரம் நிலவே வா சோகமுடன் ) எல்லாம் பாடி- என்னுடைய நண்பர்கள் எல்லாம் தமிழ் தான் என்றாலும் - நிறைய பேர்களுக்கு தமிழ் பேசுவது கூட ததிங்கினத்தோம் ... ஒரு மாதிரி, ஜின், வோட்க்கா எல்லாம் குடித்தாலும் எப்பவும் நம்ப வோட்டு ஓல்ட் மாங் தான்.
முன்பெல்லாம் பார்ட்டி முடிந்து காரை ஒட்டி கொண்டு வந்திருக்கிறேன், எனக்கெனவோ ஒரு நினைப்பு , குடித்தால் நன்றாக கார் ஓட்ட முடியும் என்று ஆனால் இப்போல்லாம் அப்படி செய்வது கிடையாது , முதல் காரியம் அவளவாக பார்ட்டிகள் கிடையாது , அப்படியே போனாலும் குடிப்பது கிடையாது, அப்படியே எப்பவாவது சரக்கு அடித்தால் டாக்சி தான்.
ஒரு முறை ஆபிசில் இருந்து நண்பர்கள் எல்லாம் ஷார்ஜாவில் கிரிக்கெட் மேட்ச் பார்க்க போனோம், இந்தியாவும் , சிறிலங்காவும் விளையாடின மேட்ச், தொடங்கும் முன்பே, ஒரு வீட்டுக்கு போய், நிறைய பெப்சி பாட்டில் எல்லாம் வாங்கி, அதில் உள்ள பெப்சியை சிறிது கொட்டிவிட்டு, அதில் துறவியை ( old monk ) நிரப்பினோம் ... அதை அழகான ஒரு ஒரு பையில் வைத்து கொண்டு போனோம், ...
ஸ்டேடியம் வாசலில் பெரிய வரிசை , வரிசையாக ஆட்கள், எல்லாரையம் சோதித்து அவர்களிடம் உள்ள பாட்டில்கள் ( கோக், பெப்சி )..மற்றும் மற்ற பைகளையும் வாங்கி வைத்து உள்ளே அனுப்பினார்கள், என்னுடைய முறை வந்த பொழுது, என் பையை பார்த்தார்கள், இதை இப்பிடியே வைத்து விட்டு நீங்கள் உள்ளே போகலாம் என்று சொன்னார்.. ஏன்னு கேட்டப்ப , கல்கத்தா மைதானத்தில் அண்மையில் குப்பிகள் / கல் / ...வீசியதில் , விளையாட்டு வீரர்களுக்கு அடி கூட ஏற்பட்டது, அதனால் தான், உங்கள் கிட்ட பெட் / பிளாஸ்டிக் போன்றவை எடுத்து செல்லலாம் , ஆனால் கண்ணாடி குப்பிகள் நோ .... எனவே கொண்டு போயிருந்த குப்பிகள் உள்ள பையை அங்கேயே வைத்து விட்டு போனோம்
கொஞ்ச நேரம் ஆனவுடன் எனக்கு திருப்பி போய் அந்த பையை எடுக்கலாமா? என்று தோனியது, இப்போ அங்கே அவ்வளவாக கூட்டம் இலலை , முன்பு இருந்த அரபி போலீஸ் காரர்கள் அங்கு இலலை, நம்ம லோக்கல் சேட்டன் மார் தான் இருந்தார், அவரிடம் நான் இங்கு விட்டு விட்டு போன ஒரு ஆரஞ்சு கலர் பை எங்கே என்று கேட்டேன், ..... தம்பி உடனே இங்கிருந்து ஓடிவிடு, அந்த பையை தேடி யாராவது வந்தா இங்க கொண்டுவான்னு ஒரு ஆபிசர் அங்கே வெயிட் பண்றார்... நான் ஏன் இன்னும் அங்கே நிக்கறேன், விடு ஜுட்......
டெல்லியில் இருந்து பின் பெங்களூருக்கு மாற்றம் , பெங்களூரில் நிறைய குடித்தது காபி தான் . எப்பவாவது சில சமயம் கொஞ்சம் தீர்த்த வாரி. பின் அங்கிரிந்து பம்பைக்கு போனோம் ,
மும்பையில் , நான் வேலை செய்த கம்பெனியில் அடிக்கடி பார்ட்டி உண்டு, அனால் ஒரே ஒரு பிரச்னை தான், ஒரு முறை போன ஓட்டலுக்கு திரும்பவும் பார்ட்டி நடத்த அனுமதி தர மாட்டார்கள், நாங்க தான் அங்கே இருக்கிற சாமானை எல்லாம் உடைச்சிட்டு , சில சமயம், ஆசாமிகளையும் சாமான் மாதிரி நினைத்து ஏதாவது சில அவயங்களை டாமேஜ் செய்து !!!!!..... அப்பறம் எப்படி அனுமதி கிடைக்கும்.
பின் துபாய் வந்து சேர்ந்தேன், இங்கும் வெகு சில சமயங்களில் மட்டும் பார்ட்டி, ஆனால் இப்போல்லாம் குடிப்பதில் துளியும் நாட்டமில்லை. ...நம்புங்க ( வயசானதுக்கு அடையாளம் !!!!!)
*********************************************************************
எனக்கு வந்த ஒரு மெயிலின் தமிழாக்கம்
ஒரு ஆசிரியை தன்னுடைய மானவர்களுக்கு ஒரு கட்டுரை போட்டி வைத்தால் - கடவுள்
உங்கள் முன் தோன்றினால், நீங்கள் என்ன கேட்பீர்கள் , ஏன் என்று ஒரு கட்டுரை போட்டி வைத்தார்
அந்த கட்டுரைகளை திருத்தும் பொழுது , இந்த கட்டுரையை படித்தவுடன், கண்களில் நீர் முட்டி .... அப்பொழுது தான் வீட்டிற்கு வந்த கணவன் அதை காண, ...என்ன ஆச்சு என கேட்க, ஆசிரியை அந்த கட்டுரையை எடுத்து கொடுத்தார் ..
அப்படி அதுல என்ன எழுதி இருக்கு

கடவுளே , உங்க கிட்ட ஒரு ஸ்பெஷல் கோரிக்கை ..
என்னை டெலிவிஷனாக மாற்றி விடவும், எங்கள் வீட்டில் அதற்க்கு உள்ள இடம் எனக்கு வேண்டும் , எப்போதுமே டிவிக்கு நல்ல தனி இடம், மிகவும் பிரதான்யமான இடம், எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் நான் வாய் திறந்தால் , கவனமாக கேட்கிறார்கள், உடம்பு சரி இலலை என்றால் ( ரிப்பேர் ) எனக்கு தனி கவனிப்பு, அப்பா வீட்டுக்கு வந்துவுடனே எனக்கு தனி கவனிப்பு, என்னுடைய அம்மாவும், எப்பொழுதெல்லாம் வருத்தமாய் இருக்கிறாரோ என்னிடம் தான் வருவார், என் சகோதரர்களும் என்னை கொண்டாட சண்டையே போட்டுக் கொள்வார்கள் , மொத்த குடும்பமே எல்லா வேலையையும் விட்டு விட்டு என்னிடம் வர போட்டி போடுவார்கள் . கடைசியாக - நான் எல்லாரையும் சந்தோஷப் படுத்த முடியும் .
எனக்கு டிவியாக மாற வேண்டும்
இதை படித்த அந்த கணவர், " அட கடவுளே, யார் வூட்டு புள்ளையோ பாவம் - என்ன கொடுமை கார பெற்றோர்கள் " என்றார்.
அழுது கொண்டிருந்த மனைவி கணவனை பார்த்தார் - " இது நம்ம பையன் எழுதியதுங்க " ...
CA பரிச்சை என்றால் சும்மாவா , ரொம்ப கஷ்டம் அப்படின்னு சொல்வேன்னு தானே எதிர்பாத்தீங்க ....கஷ்டம் எல்லாம் கிடையாது, ஆனால் அடிக்கடி பெயில் ஆகணும் ..பெயில் ஆனா சோகம் தானே ... அதுக்குகாக உக்காந்து அடிப்பாங்க. நான் அப்பவும் ( பெயில் ஆனப்பவும் ) அதை தொட்டது கிடையாது , CA pass ஆகாம அதெல்லாம் சாப்பிட கூடாதுன்னு ஒரு கொள்கை ...ஆனா, இந்த பாழாய் போன CA அவ்வளவு சுலபம் கிடையாது, அப்பொழுது என் நண்பன் ஒருவன் வீட்டிற்கு அடிக்கடி போவதுண்டு, அவன் அண்ணன் air -force இல இருந்ததால் எப்பவும் பாட்டில் இருக்கும் , நிறைய நாள் நானும், என்னை போல் வேறு ஒரு நண்பனும் தினம் அவர்கள் வீட்டுக்கு போவோம் ... பின் மூன்று பெரும் சில சமயம் அங்கு உள்ள கமல் தியேட்டரில் சினிமா பார்த்து விட்டு ஒரே கட்டிலில் ( நாங்க மூணு பேர் மட்டுமே !!!!!) படுத்து உறங்கவோம். ..( அது ஒரு கனா காலம் )...

நான் பள்ளியில் படித்த காலத்தில் ... யாராவது பீடி /சிகரெட் குடித்தாலே அது தான் மெயின் நியூஸ் , மொத்தப் பள்ளியில் ஒரு ரெண்டு அல்லது மூன்று பேர் அது போல் இருப்பார்கள், அவங்களை எல்லாம் அண்ணாந்து தான் பார்ப்போம் .
கல்லூரி வாழ்க்கையிலும் , அந்த பக்கம் போகலை, கையில் அவ்வளாவாக காசு புழக்கம் கிடையாது ( ஏன்டா பொய் சொல்ற - காசே கிடையாது ) .. தஞ்சாவூர் கிராமத்தில் இருந்து வரும் சிலர் சரக்கு அடிப்பார்கள் ..
கல்லூரிக்கு பிறகு , அந்த CA நாட்களில் , என் நண்பன் CA பாஸ் செய்து விட்டான், அதற்காக ஒரு பெரிய பார்ட்டி , ஆனால் நான் இன்னும் பாஸ் ஆக வில்லை ஒரு குரூப் பைனலில் இன்னும் பாக்கி இருந்தது. கொள்கையை தூர போட்டுவிட்டு நானும் தொடங்கினேன். முன்ன பின்ன குடித்து கிடையாது , பீர் , விஸ்கி எலாம் பயங்கர ஸ்மெல், எனவே வயதான துறவியை நாடினேன் (Old monk) ... அதுல நிறைய ஐஸ் போட்டு, தமஸ் அப் கலந்து சும்மா பூந்து விளையாடினோம். எம் ஜி ஆர், பாட்டு ( நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு - ஆட்டமுடன் , ஆயிரம் நிலவே வா சோகமுடன் ) எல்லாம் பாடி- என்னுடைய நண்பர்கள் எல்லாம் தமிழ் தான் என்றாலும் - நிறைய பேர்களுக்கு தமிழ் பேசுவது கூட ததிங்கினத்தோம் ... ஒரு மாதிரி, ஜின், வோட்க்கா எல்லாம் குடித்தாலும் எப்பவும் நம்ப வோட்டு ஓல்ட் மாங் தான்.
முன்பெல்லாம் பார்ட்டி முடிந்து காரை ஒட்டி கொண்டு வந்திருக்கிறேன், எனக்கெனவோ ஒரு நினைப்பு , குடித்தால் நன்றாக கார் ஓட்ட முடியும் என்று ஆனால் இப்போல்லாம் அப்படி செய்வது கிடையாது , முதல் காரியம் அவளவாக பார்ட்டிகள் கிடையாது , அப்படியே போனாலும் குடிப்பது கிடையாது, அப்படியே எப்பவாவது சரக்கு அடித்தால் டாக்சி தான்.
ஒரு முறை ஆபிசில் இருந்து நண்பர்கள் எல்லாம் ஷார்ஜாவில் கிரிக்கெட் மேட்ச் பார்க்க போனோம், இந்தியாவும் , சிறிலங்காவும் விளையாடின மேட்ச், தொடங்கும் முன்பே, ஒரு வீட்டுக்கு போய், நிறைய பெப்சி பாட்டில் எல்லாம் வாங்கி, அதில் உள்ள பெப்சியை சிறிது கொட்டிவிட்டு, அதில் துறவியை ( old monk ) நிரப்பினோம் ... அதை அழகான ஒரு ஒரு பையில் வைத்து கொண்டு போனோம், ...
ஸ்டேடியம் வாசலில் பெரிய வரிசை , வரிசையாக ஆட்கள், எல்லாரையம் சோதித்து அவர்களிடம் உள்ள பாட்டில்கள் ( கோக், பெப்சி )..மற்றும் மற்ற பைகளையும் வாங்கி வைத்து உள்ளே அனுப்பினார்கள், என்னுடைய முறை வந்த பொழுது, என் பையை பார்த்தார்கள், இதை இப்பிடியே வைத்து விட்டு நீங்கள் உள்ளே போகலாம் என்று சொன்னார்.. ஏன்னு கேட்டப்ப , கல்கத்தா மைதானத்தில் அண்மையில் குப்பிகள் / கல் / ...வீசியதில் , விளையாட்டு வீரர்களுக்கு அடி கூட ஏற்பட்டது, அதனால் தான், உங்கள் கிட்ட பெட் / பிளாஸ்டிக் போன்றவை எடுத்து செல்லலாம் , ஆனால் கண்ணாடி குப்பிகள் நோ .... எனவே கொண்டு போயிருந்த குப்பிகள் உள்ள பையை அங்கேயே வைத்து விட்டு போனோம்
கொஞ்ச நேரம் ஆனவுடன் எனக்கு திருப்பி போய் அந்த பையை எடுக்கலாமா? என்று தோனியது, இப்போ அங்கே அவ்வளவாக கூட்டம் இலலை , முன்பு இருந்த அரபி போலீஸ் காரர்கள் அங்கு இலலை, நம்ம லோக்கல் சேட்டன் மார் தான் இருந்தார், அவரிடம் நான் இங்கு விட்டு விட்டு போன ஒரு ஆரஞ்சு கலர் பை எங்கே என்று கேட்டேன், ..... தம்பி உடனே இங்கிருந்து ஓடிவிடு, அந்த பையை தேடி யாராவது வந்தா இங்க கொண்டுவான்னு ஒரு ஆபிசர் அங்கே வெயிட் பண்றார்... நான் ஏன் இன்னும் அங்கே நிக்கறேன், விடு ஜுட்......
டெல்லியில் இருந்து பின் பெங்களூருக்கு மாற்றம் , பெங்களூரில் நிறைய குடித்தது காபி தான் . எப்பவாவது சில சமயம் கொஞ்சம் தீர்த்த வாரி. பின் அங்கிரிந்து பம்பைக்கு போனோம் ,
மும்பையில் , நான் வேலை செய்த கம்பெனியில் அடிக்கடி பார்ட்டி உண்டு, அனால் ஒரே ஒரு பிரச்னை தான், ஒரு முறை போன ஓட்டலுக்கு திரும்பவும் பார்ட்டி நடத்த அனுமதி தர மாட்டார்கள், நாங்க தான் அங்கே இருக்கிற சாமானை எல்லாம் உடைச்சிட்டு , சில சமயம், ஆசாமிகளையும் சாமான் மாதிரி நினைத்து ஏதாவது சில அவயங்களை டாமேஜ் செய்து !!!!!..... அப்பறம் எப்படி அனுமதி கிடைக்கும்.
பின் துபாய் வந்து சேர்ந்தேன், இங்கும் வெகு சில சமயங்களில் மட்டும் பார்ட்டி, ஆனால் இப்போல்லாம் குடிப்பதில் துளியும் நாட்டமில்லை. ...நம்புங்க ( வயசானதுக்கு அடையாளம் !!!!!)
*********************************************************************
எனக்கு வந்த ஒரு மெயிலின் தமிழாக்கம்
ஒரு ஆசிரியை தன்னுடைய மானவர்களுக்கு ஒரு கட்டுரை போட்டி வைத்தால் - கடவுள்
உங்கள் முன் தோன்றினால், நீங்கள் என்ன கேட்பீர்கள் , ஏன் என்று ஒரு கட்டுரை போட்டி வைத்தார்
அந்த கட்டுரைகளை திருத்தும் பொழுது , இந்த கட்டுரையை படித்தவுடன், கண்களில் நீர் முட்டி .... அப்பொழுது தான் வீட்டிற்கு வந்த கணவன் அதை காண, ...என்ன ஆச்சு என கேட்க, ஆசிரியை அந்த கட்டுரையை எடுத்து கொடுத்தார் ..
அப்படி அதுல என்ன எழுதி இருக்கு

கடவுளே , உங்க கிட்ட ஒரு ஸ்பெஷல் கோரிக்கை ..
என்னை டெலிவிஷனாக மாற்றி விடவும், எங்கள் வீட்டில் அதற்க்கு உள்ள இடம் எனக்கு வேண்டும் , எப்போதுமே டிவிக்கு நல்ல தனி இடம், மிகவும் பிரதான்யமான இடம், எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் நான் வாய் திறந்தால் , கவனமாக கேட்கிறார்கள், உடம்பு சரி இலலை என்றால் ( ரிப்பேர் ) எனக்கு தனி கவனிப்பு, அப்பா வீட்டுக்கு வந்துவுடனே எனக்கு தனி கவனிப்பு, என்னுடைய அம்மாவும், எப்பொழுதெல்லாம் வருத்தமாய் இருக்கிறாரோ என்னிடம் தான் வருவார், என் சகோதரர்களும் என்னை கொண்டாட சண்டையே போட்டுக் கொள்வார்கள் , மொத்த குடும்பமே எல்லா வேலையையும் விட்டு விட்டு என்னிடம் வர போட்டி போடுவார்கள் . கடைசியாக - நான் எல்லாரையும் சந்தோஷப் படுத்த முடியும் .
எனக்கு டிவியாக மாற வேண்டும்
இதை படித்த அந்த கணவர், " அட கடவுளே, யார் வூட்டு புள்ளையோ பாவம் - என்ன கொடுமை கார பெற்றோர்கள் " என்றார்.
அழுது கொண்டிருந்த மனைவி கணவனை பார்த்தார் - " இது நம்ம பையன் எழுதியதுங்க " ...
திங்கள், 17 மே, 2010
கர்நாடக கோவில்கள் -
துபாய் கராமா பார்க்கில் என் மகளுடன் சென்ற பொழுது, மூன்றாவது வகுப்பு படிக்கும், என் மகளின் தோழி , என்னை காண்பித்து is this your Grand father ? என்று கேட்டவுடன் என் சப்த நாடியும் ஒடுங்கி , பின் அதை நினைத்து இப்பொழுதும் பெரிதாக சிரிக்கிறேன்.
அந்த கேள்வி வாய் தவறி தான் வந்திருக்கும் என நம்புகிறேன் . ரொம்ப நாள் முன்னாடி, மும்பையில் வசிக்கும் பொழுது ஒரு மழை காலத்தில் மாத்தேரன் போய் இருந்தோம், ஒரு பெண், அங்கிள் கொஞ்சம் நகருங்க என்று சொன்னவுடன் அது எனக்கு கேட்க கூட இலலை, மீண்டும் அந்த பெண் அங்கிள் உங்களை தான் என்று சொன்னபொழுது , எனக்கு சில நாள் உறக்கம் போனது.
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
ஒரு நாள் ஏதோ ஒரு ஹிந்தி பட காட்சியை பார்த்து கொண்டிருந்த பொழுது , அதில் ஒரு காட்சி படி மிதுன் தன்னுடைய காலமாகிய ஒரு மகனின் போட்டோவை பார்த்து அழுது கொண்டிருப்பார், என் மகள் அதை பார்த்து , ஏன் அவர் அழுகிறார் என்றாள்?. அவரோட மகன் , ஆர்மியில் போர் செய்யும் பொழுது இறந்து விட்டார் என்று சொன்னேன். ஆர்மினா என்ன என்றாள் ? ஆர்மினா, வேற்று நாடுடன் சண்டை போட்டு , நம்மை காப்பவர்கள் என்று சொன்னேன் . அது மாதிரி ஆர்மியில் சண்டையில் உயிர் போயிருக்கும் என்றேன்
, உடனே என்னை பார்த்து நீ ஆர்மிக்கெல்லாம் போகதே என்று சீரியசாக சொன்னாள்.
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
தினமும் குளித்து (!!!!???***) சாமிக்கு விளக்கு ஏற்றி , ஊதுபத்தி காமிக்கும் பழக்கம் உண்டு , அண்மையில் உடுப்பி சென்ற பொழுது ஒரு சின்ன மணி மண்டபம் / தேர் போல உள்ள , ரோஸ் wood ல செய்த அந்த மண்டபத்தில் உள்ள சின்ன /குட்டி கிருஷ்ணனுக்கு , அதுனுள் ஊதுபத்தி காமிப்பேன், அந்த வெள்ளை புகை நிறைய அந்த மண்டபத்தில் பரவி, சில நொடிகளுக்கு அங்கேயே இருக்கும். என் மகளை கூப்பிட்டு , பார்த்தியா எவ்வளவு நல்லா இருக்குன்னு கேட்டேன், அதற்கு அவள் " அப்பா , அங்க இப்படி நிறைய புகை எல்லாம் போடதே சாமிக்கு இருமல் வரும் ".... ஒரு நிமிடம் ஆழ்ந்து சிந்தித்தேன், இப்பொழுது அங்கே நிறைய புகை வருமாறு செய்வது கிடையாது .

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
சில நாட்கள் முன் இந்தியா ஒரு வாரம் போயிருந்தோம் , . நிறைய கோவில்கள் பார்த்தோம். பெங்களூரில் போய் இறங்கியவுடன் , உடனே முன்பே ஏற்பாடு செய்திருந்த இன்னோவா காரில் புறப்பட்டோம் ... வண்டி மைசூர் போகும் பாதையில் பாதி தூரம் போனது, நல்ல , வழ வழப்பான புதிய சாலை ..போகும் வழியில் பிடதி ஆசிரமம் வழியாக தான் போனது ..வெளியில் இருந்தே /காரில் போய் கொண்டே பார்த்தோம்,.....
கோவில்கள் பற்றி நம்ம துளசி டீச்சர் ரொம்ப அழகாக / விரிவாக நிறைய படங்களுடன் பதிவு பதிந்துள்ளார் அதற்க்கு இங்கு கிளிக்கவும்.
வழியில் ஒரு சின்ன இடத்தில காபிக்காக நிறுத்தினோம், அங்கு குழந்தைக்காக புல்லாங்குழல், ஒரு ஒன்றுக்குள் ஓன்று நுழையும் பொம்மைகள் வாங்கினோம். கையில் ஐ பாட் இருந்ததால் அருமையான இசையும் சேர்ந்து கொண்டது ( பெரும்பாலும் கர்நாடக இசை ) .
முதலில் தரிசனம் செய்தது - சிரிங்கேரி - அருமையான இடத்தில புராதனமான கோவில், குறைந்த பட்சம், ஒரு நாளாவது தங்கி நன்கு பார்க்க வேண்டும், ஆனால் நாங்கள் அங்கு இருந்த நேரம் சில மணி நேரங்கள் மட்டுமே - ஆற்றில் உள்ள மீன்களை பார்த்து என் அண்ணா அடித்த கமெண்ட், இது துபாய்ல பார்த்த டால்பினை விட நல்லா கொழு கொழுன்னு பெரிசா இருக்கே ??????
அங்கிருந்து நேராக மூகாம்பிகா போனோம், அடர்ந்த காடுகள் , கும்மிருட்டு , போய் சேர்வதற்குள் இரவு ஆகி விட்டது- கோவில் அருகிலேயே சூப்பர் லாட்ஜ் , ஏ.சி வண்டியில் வந்த களைப்பிற்கு , அருகில் உள்ள சின்ன உணவகத்தில் சாப்பிட்டு, அடுத்த நாளைக்கு தயார் ஆனோம் ...
கோவிலுக்கு போவதற்கு சில நாட்கள் முன் இந்த 360 டிகிரி , புகை படம் கிடைத்தது நேரில் அது போலவே இருந்தது - கேரளா பாணி கோவில், மிகவும் விடியற் காலை போய் சேர்ந்து விட்டோம், அம்பாள் கோவிலாக இருந்தாலும் நான் எனக்கு தெரிந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சொன்னேன் (படித்தேன் !!!!) . அருமையான தரிசனம், கொடுநல்லூர் கோவில் நினைவில் வந்தது ...
சரஸ்வதி மண்டபத்தில் வைத்து மகளுக்கு வித்யாரம்பம் செய்தோம், மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது ... ரொம்ப சின்ன ஊர், நிறைய சிற்றுண்டி கடைகள் , .மதியம், கோவிலில் எல்லாருக்கும் கிடைக்கும் அந்த அன்ன தானத்தில் போய் உண்டோம், ரொம்ப ரொம்ப ருசியா இருந்தது, பூசணிக்காய், பரங்கி காய் எல்லாம் போட்டு சாம்பார் , சுட சுட ஆவி பறக்கும் சாப்பாடு , ருசியான ரசம் , பாயாசம் ...
அங்கிருந்து பிற்பகலில், முர்தேஷ்வர் என்கிற சிவாலயத்திற்கு போனோம், இது பற்றி நம்ம துளசி டீச்சர் ரொம்ப அழகாக / விரிவாக
நிறைய படங்களுடன் பதிவு பதிந்துள்ளார் அதற்க்கு இங்கு கிளிக்கவும்.
நானும் சில படங்கள் மட்டுமே எடுத்தேன் ... அதில் சில

முர்தேஷ்வர் கோவில் அருகில் உள்ள பீச், ரொம்ப நல்லா இருக்கு, படகு சவாரி, தண்ணீர் பைக் , போன்ற நிறய விளையாட்டுகளும் இங்கு உண்டு

முர்தேஷ்வர் கோவில் அருகில்


ஹொரநாடு ......தங்கும் இடம்

இத்தனை பேர்தான் இந்த ட்ரிப் போனோம்

கோடையிலும் பச்சை பசலேன்று காணும் காடுகள்


அங்கு ஒரு வெளிநாட்டு குழுவினரை பார்த்தோம், சென்னையில் இருந்து ஆட்டோ ரிக்க்ஷாவில் மும்பை / கோவா வரை போகும் வழியில் அங்கு வந்துள்ளார்கள் , நல்ல ஐடியா போல தான் தோன்றுகிறது , ஆனால் நாம்ப இது மாதிரி எல்லாம் செய்ய மாட்டோம் ,
உடுப்பி போனவுடன் ( கிட்ட தட்ட இரவு ஆகி விட்டது ) ... உடனே குளித்து கோவிலுக்கு போனோம், (துளசி டீச்சர் பதிவு - இங்கு) ரொம்ப சின்ன கோவில் / பிரகாரம், கூட்டம் இலலை , ரொம்ப நல்ல தரிசனம் - சுத்தி சுத்தி வந்தால் அடிக்கடி பகவானை நன்கு தரிசிக்கலாம். அதெல்லாம் முடிந்த பிறகு, கோவிலின் ஒரு ஊழியர் எங்களை அடுத்த நாள் விடியற்காலை வருமாறு சொன்னார். ஏதோ ஒரு வெகு புராதனமான சிற்றுண்டி கடையில் சுவையான டிபன் சாப்பிட்டு உறங்கப்போனோம்.
நான் கிட்டத்தட்ட மூற்றரைக்கே எழுந்து குளித்து கோவிலுக்கே போய்விட்டேன், அப்பொழுது தான் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம் எலாம் தொடக்கம், சுத்தி சுத்தி வந்து தரிசனம் செய்தேன், ஒரு சிலர் பாடினர், எனக்கும் பாட வேண்டும் என்று மிக ஆவல், ஆனால் புஸ்தகம் ஒன்றும் கையில் இலலை - கையில் கொண்டு போயிருந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அந்த மண்டபத்தில் சாமி முன் சொன்னேன் , அடிக்கடி எழுந்து போய், பகவானையும் தரிசனம் செய்தேன், கொஞ்ச நேரத்தில் அண்ணன், மற்றும் என் மனைவி , மகள் எல்லோரும் வந்தார்கள் ...
சரியாக காலை 6.30 மணிக்கு, வாங்க , எல்லாரும் சாப்பிட போகலாம் என்றார்கள் , அன்று துவாதசி, ஸ்பெஷல் சாப்பாடு என்று சொன்னார்கள். பெரிய சாப்பாடு ஹால் , எல்லாரையும் உட்கார வைத்து பரிமாற தொடங்கினார்கள் , ஒரு இருபத்தியஞ்சு ஐட்டம் இருக்கலாம் - பரிமாறினார்கள் - அந்த மடத்தின் பெரிய சுவாமிஜி வந்து எல்லாருக்கும் தீர்த்தம் கொடுத்து - பின்பு தான் சாப்பிட தொடங்கினோம், சில சமயங்களில் வெகு அபூர்வமாக விடியற்காலை டிபன் சாப்பிட்ட அனுபவம் உண்டு, ஆனால் இது மாதிரி அதி காலையில் சாப்பாடு இது தான் முதல் தடவை - பாயாசம் / பருப்பு , நெய், அது இது ..ரொம்ப ருசியான சாப்பாடு . பின்பு அங்கிருந்து தர்மஸ்தலா போனோம்.
தர்மஸ்தலாவில், உச்சி நேரம் , எங்கு பார்த்தாலும் ஒருவித ஒழுங்கு , நோட்டீஸ் போர்டு, அறிவிப்புகள், வரிசையில் நிற்க , போக தடுப்புகள் - வரிசையில் போய் கொண்டிருந்த பொழுது - ஒர்லாண்டோ டிஸ்னி லான்ட் ஞாபகம் வந்தது . அங்கும் அது போல் ஒவ்வொரு ஸ்டுடியோ போவதற்கு, பெரிய வரிசை இருக்கும், அங்கங்கு பெரிய விசிறிகள் இருக்கும் ( table / wall mounted ) , அங்கங்கு டிவியில் ஏதாவது அறிவிப்புகள் / அங்கு என்ன நடக்க போகிறது என்று செய்திகள்... அதே போலவே இங்கு, நிறைய இடத்தில சுத்தமான டம்ப்ளரில் நல்ல குடிநீர் , திருச்சி ஐயப்பன் கோவிலுக்கு பிறகு, நான் பார்த்த கோவில்களிலேயே ஒரு ஒழுங்கு, சுத்தம் , விவரம் . அருமையான கோவில் . உடனே அங்கிருந்து கிளம்பி விட்டோம்
போகும் வழியில் ஒரு இடத்தில காபி / டிபன் / டீ க்கு நிறுத்தி போனோம். மலையில் உள்ள ஹொரநாடு கோவிலுக்கு மாலையில் போய் சேர்ந்தோம், போகும் வழி எல்லாம் பசுமையான அடர்ந்த காடுகள் , வானளாவிய உயர்ந்த மரங்கள் , அவதார் சினிமா காட்சிகள் போல இருந்தது , சில இடங்களில் ரிசார்ட் போர்டுகள் தென்பட்டது . இசையும் / ஓரளவுக்கு நல்ல சாலையும் / ஏசி வண்டியும் / தேர்ந்த ஓட்டுனரும் எல்லாமாக சேர்ந்து பயணம் மிக சௌகரியமாக இருந்தது ...
கோவில் போய் அன்ன பூர்நேஸ்வரியை தரிசனம் செய்தோம், பெரிய கோவில் , மிக பெரிய விக்ரஹம், மனைவி, மன்னி , மாமியார் எல்லாரும் லலிதா சஹாஸ்ரனாமத்தை உரக்க சொன்னார்கள் , நான் கூடவே ஆனால் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை!!!!.
அங்கு தங்குவதா வேண்டாமா இன்று அலசிவிட்டு, அன்று இரவே கிளம்பி விட்டோம். நான் கொண்டு போயிருந்த காமிரா பழுது என்பதால் நிறைய உபயோகிக்க வில்லை , மேலும் கோவில் போன்ற இடங்களில் அது பற்றிய ஞாபகம் கூட வரவில்லை - இருந்தாலும் நான் புகை படம் நிறைய எடுத்திருக்க வேண்டும் - ( இன்னும் பல முறை அங்கு செல்ல வேண்டும் - )

பெங்களூர் வீட்டில் கப்லா என்ற விளையாட்டு - சிறிய குழந்தைகாளுக்கான விளையாட்டு - ஆனால் பெரியவர்களும் விளையாடலாம் - செவ்வக மர கட்டைகள் - அதை வைத்து என்ன வேண்டுமாலும் செய்யலாம் நான் செய்த உயரமான ...டவர்
அந்த கேள்வி வாய் தவறி தான் வந்திருக்கும் என நம்புகிறேன் . ரொம்ப நாள் முன்னாடி, மும்பையில் வசிக்கும் பொழுது ஒரு மழை காலத்தில் மாத்தேரன் போய் இருந்தோம், ஒரு பெண், அங்கிள் கொஞ்சம் நகருங்க என்று சொன்னவுடன் அது எனக்கு கேட்க கூட இலலை, மீண்டும் அந்த பெண் அங்கிள் உங்களை தான் என்று சொன்னபொழுது , எனக்கு சில நாள் உறக்கம் போனது.
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
ஒரு நாள் ஏதோ ஒரு ஹிந்தி பட காட்சியை பார்த்து கொண்டிருந்த பொழுது , அதில் ஒரு காட்சி படி மிதுன் தன்னுடைய காலமாகிய ஒரு மகனின் போட்டோவை பார்த்து அழுது கொண்டிருப்பார், என் மகள் அதை பார்த்து , ஏன் அவர் அழுகிறார் என்றாள்?. அவரோட மகன் , ஆர்மியில் போர் செய்யும் பொழுது இறந்து விட்டார் என்று சொன்னேன். ஆர்மினா என்ன என்றாள் ? ஆர்மினா, வேற்று நாடுடன் சண்டை போட்டு , நம்மை காப்பவர்கள் என்று சொன்னேன் . அது மாதிரி ஆர்மியில் சண்டையில் உயிர் போயிருக்கும் என்றேன்
, உடனே என்னை பார்த்து நீ ஆர்மிக்கெல்லாம் போகதே என்று சீரியசாக சொன்னாள்.
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
தினமும் குளித்து (!!!!???***) சாமிக்கு விளக்கு ஏற்றி , ஊதுபத்தி காமிக்கும் பழக்கம் உண்டு , அண்மையில் உடுப்பி சென்ற பொழுது ஒரு சின்ன மணி மண்டபம் / தேர் போல உள்ள , ரோஸ் wood ல செய்த அந்த மண்டபத்தில் உள்ள சின்ன /குட்டி கிருஷ்ணனுக்கு , அதுனுள் ஊதுபத்தி காமிப்பேன், அந்த வெள்ளை புகை நிறைய அந்த மண்டபத்தில் பரவி, சில நொடிகளுக்கு அங்கேயே இருக்கும். என் மகளை கூப்பிட்டு , பார்த்தியா எவ்வளவு நல்லா இருக்குன்னு கேட்டேன், அதற்கு அவள் " அப்பா , அங்க இப்படி நிறைய புகை எல்லாம் போடதே சாமிக்கு இருமல் வரும் ".... ஒரு நிமிடம் ஆழ்ந்து சிந்தித்தேன், இப்பொழுது அங்கே நிறைய புகை வருமாறு செய்வது கிடையாது .

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
சில நாட்கள் முன் இந்தியா ஒரு வாரம் போயிருந்தோம் , . நிறைய கோவில்கள் பார்த்தோம். பெங்களூரில் போய் இறங்கியவுடன் , உடனே முன்பே ஏற்பாடு செய்திருந்த இன்னோவா காரில் புறப்பட்டோம் ... வண்டி மைசூர் போகும் பாதையில் பாதி தூரம் போனது, நல்ல , வழ வழப்பான புதிய சாலை ..போகும் வழியில் பிடதி ஆசிரமம் வழியாக தான் போனது ..வெளியில் இருந்தே /காரில் போய் கொண்டே பார்த்தோம்,.....
கோவில்கள் பற்றி நம்ம துளசி டீச்சர் ரொம்ப அழகாக / விரிவாக நிறைய படங்களுடன் பதிவு பதிந்துள்ளார் அதற்க்கு இங்கு கிளிக்கவும்.
வழியில் ஒரு சின்ன இடத்தில காபிக்காக நிறுத்தினோம், அங்கு குழந்தைக்காக புல்லாங்குழல், ஒரு ஒன்றுக்குள் ஓன்று நுழையும் பொம்மைகள் வாங்கினோம். கையில் ஐ பாட் இருந்ததால் அருமையான இசையும் சேர்ந்து கொண்டது ( பெரும்பாலும் கர்நாடக இசை ) .
முதலில் தரிசனம் செய்தது - சிரிங்கேரி - அருமையான இடத்தில புராதனமான கோவில், குறைந்த பட்சம், ஒரு நாளாவது தங்கி நன்கு பார்க்க வேண்டும், ஆனால் நாங்கள் அங்கு இருந்த நேரம் சில மணி நேரங்கள் மட்டுமே - ஆற்றில் உள்ள மீன்களை பார்த்து என் அண்ணா அடித்த கமெண்ட், இது துபாய்ல பார்த்த டால்பினை விட நல்லா கொழு கொழுன்னு பெரிசா இருக்கே ??????
அங்கிருந்து நேராக மூகாம்பிகா போனோம், அடர்ந்த காடுகள் , கும்மிருட்டு , போய் சேர்வதற்குள் இரவு ஆகி விட்டது- கோவில் அருகிலேயே சூப்பர் லாட்ஜ் , ஏ.சி வண்டியில் வந்த களைப்பிற்கு , அருகில் உள்ள சின்ன உணவகத்தில் சாப்பிட்டு, அடுத்த நாளைக்கு தயார் ஆனோம் ...
கோவிலுக்கு போவதற்கு சில நாட்கள் முன் இந்த 360 டிகிரி , புகை படம் கிடைத்தது நேரில் அது போலவே இருந்தது - கேரளா பாணி கோவில், மிகவும் விடியற் காலை போய் சேர்ந்து விட்டோம், அம்பாள் கோவிலாக இருந்தாலும் நான் எனக்கு தெரிந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சொன்னேன் (படித்தேன் !!!!) . அருமையான தரிசனம், கொடுநல்லூர் கோவில் நினைவில் வந்தது ...
சரஸ்வதி மண்டபத்தில் வைத்து மகளுக்கு வித்யாரம்பம் செய்தோம், மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது ... ரொம்ப சின்ன ஊர், நிறைய சிற்றுண்டி கடைகள் , .மதியம், கோவிலில் எல்லாருக்கும் கிடைக்கும் அந்த அன்ன தானத்தில் போய் உண்டோம், ரொம்ப ரொம்ப ருசியா இருந்தது, பூசணிக்காய், பரங்கி காய் எல்லாம் போட்டு சாம்பார் , சுட சுட ஆவி பறக்கும் சாப்பாடு , ருசியான ரசம் , பாயாசம் ...
அங்கிருந்து பிற்பகலில், முர்தேஷ்வர் என்கிற சிவாலயத்திற்கு போனோம், இது பற்றி நம்ம துளசி டீச்சர் ரொம்ப அழகாக / விரிவாக
நிறைய படங்களுடன் பதிவு பதிந்துள்ளார் அதற்க்கு இங்கு கிளிக்கவும்.
நானும் சில படங்கள் மட்டுமே எடுத்தேன் ... அதில் சில

முர்தேஷ்வர் கோவில் அருகில் உள்ள பீச், ரொம்ப நல்லா இருக்கு, படகு சவாரி, தண்ணீர் பைக் , போன்ற நிறய விளையாட்டுகளும் இங்கு உண்டு

முர்தேஷ்வர் கோவில் அருகில்


ஹொரநாடு ......தங்கும் இடம்

இத்தனை பேர்தான் இந்த ட்ரிப் போனோம்

கோடையிலும் பச்சை பசலேன்று காணும் காடுகள்


அங்கு ஒரு வெளிநாட்டு குழுவினரை பார்த்தோம், சென்னையில் இருந்து ஆட்டோ ரிக்க்ஷாவில் மும்பை / கோவா வரை போகும் வழியில் அங்கு வந்துள்ளார்கள் , நல்ல ஐடியா போல தான் தோன்றுகிறது , ஆனால் நாம்ப இது மாதிரி எல்லாம் செய்ய மாட்டோம் ,
உடுப்பி போனவுடன் ( கிட்ட தட்ட இரவு ஆகி விட்டது ) ... உடனே குளித்து கோவிலுக்கு போனோம், (துளசி டீச்சர் பதிவு - இங்கு) ரொம்ப சின்ன கோவில் / பிரகாரம், கூட்டம் இலலை , ரொம்ப நல்ல தரிசனம் - சுத்தி சுத்தி வந்தால் அடிக்கடி பகவானை நன்கு தரிசிக்கலாம். அதெல்லாம் முடிந்த பிறகு, கோவிலின் ஒரு ஊழியர் எங்களை அடுத்த நாள் விடியற்காலை வருமாறு சொன்னார். ஏதோ ஒரு வெகு புராதனமான சிற்றுண்டி கடையில் சுவையான டிபன் சாப்பிட்டு உறங்கப்போனோம்.
நான் கிட்டத்தட்ட மூற்றரைக்கே எழுந்து குளித்து கோவிலுக்கே போய்விட்டேன், அப்பொழுது தான் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம் எலாம் தொடக்கம், சுத்தி சுத்தி வந்து தரிசனம் செய்தேன், ஒரு சிலர் பாடினர், எனக்கும் பாட வேண்டும் என்று மிக ஆவல், ஆனால் புஸ்தகம் ஒன்றும் கையில் இலலை - கையில் கொண்டு போயிருந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அந்த மண்டபத்தில் சாமி முன் சொன்னேன் , அடிக்கடி எழுந்து போய், பகவானையும் தரிசனம் செய்தேன், கொஞ்ச நேரத்தில் அண்ணன், மற்றும் என் மனைவி , மகள் எல்லோரும் வந்தார்கள் ...
சரியாக காலை 6.30 மணிக்கு, வாங்க , எல்லாரும் சாப்பிட போகலாம் என்றார்கள் , அன்று துவாதசி, ஸ்பெஷல் சாப்பாடு என்று சொன்னார்கள். பெரிய சாப்பாடு ஹால் , எல்லாரையும் உட்கார வைத்து பரிமாற தொடங்கினார்கள் , ஒரு இருபத்தியஞ்சு ஐட்டம் இருக்கலாம் - பரிமாறினார்கள் - அந்த மடத்தின் பெரிய சுவாமிஜி வந்து எல்லாருக்கும் தீர்த்தம் கொடுத்து - பின்பு தான் சாப்பிட தொடங்கினோம், சில சமயங்களில் வெகு அபூர்வமாக விடியற்காலை டிபன் சாப்பிட்ட அனுபவம் உண்டு, ஆனால் இது மாதிரி அதி காலையில் சாப்பாடு இது தான் முதல் தடவை - பாயாசம் / பருப்பு , நெய், அது இது ..ரொம்ப ருசியான சாப்பாடு . பின்பு அங்கிருந்து தர்மஸ்தலா போனோம்.
தர்மஸ்தலாவில், உச்சி நேரம் , எங்கு பார்த்தாலும் ஒருவித ஒழுங்கு , நோட்டீஸ் போர்டு, அறிவிப்புகள், வரிசையில் நிற்க , போக தடுப்புகள் - வரிசையில் போய் கொண்டிருந்த பொழுது - ஒர்லாண்டோ டிஸ்னி லான்ட் ஞாபகம் வந்தது . அங்கும் அது போல் ஒவ்வொரு ஸ்டுடியோ போவதற்கு, பெரிய வரிசை இருக்கும், அங்கங்கு பெரிய விசிறிகள் இருக்கும் ( table / wall mounted ) , அங்கங்கு டிவியில் ஏதாவது அறிவிப்புகள் / அங்கு என்ன நடக்க போகிறது என்று செய்திகள்... அதே போலவே இங்கு, நிறைய இடத்தில சுத்தமான டம்ப்ளரில் நல்ல குடிநீர் , திருச்சி ஐயப்பன் கோவிலுக்கு பிறகு, நான் பார்த்த கோவில்களிலேயே ஒரு ஒழுங்கு, சுத்தம் , விவரம் . அருமையான கோவில் . உடனே அங்கிருந்து கிளம்பி விட்டோம்
போகும் வழியில் ஒரு இடத்தில காபி / டிபன் / டீ க்கு நிறுத்தி போனோம். மலையில் உள்ள ஹொரநாடு கோவிலுக்கு மாலையில் போய் சேர்ந்தோம், போகும் வழி எல்லாம் பசுமையான அடர்ந்த காடுகள் , வானளாவிய உயர்ந்த மரங்கள் , அவதார் சினிமா காட்சிகள் போல இருந்தது , சில இடங்களில் ரிசார்ட் போர்டுகள் தென்பட்டது . இசையும் / ஓரளவுக்கு நல்ல சாலையும் / ஏசி வண்டியும் / தேர்ந்த ஓட்டுனரும் எல்லாமாக சேர்ந்து பயணம் மிக சௌகரியமாக இருந்தது ...
கோவில் போய் அன்ன பூர்நேஸ்வரியை தரிசனம் செய்தோம், பெரிய கோவில் , மிக பெரிய விக்ரஹம், மனைவி, மன்னி , மாமியார் எல்லாரும் லலிதா சஹாஸ்ரனாமத்தை உரக்க சொன்னார்கள் , நான் கூடவே ஆனால் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை!!!!.
அங்கு தங்குவதா வேண்டாமா இன்று அலசிவிட்டு, அன்று இரவே கிளம்பி விட்டோம். நான் கொண்டு போயிருந்த காமிரா பழுது என்பதால் நிறைய உபயோகிக்க வில்லை , மேலும் கோவில் போன்ற இடங்களில் அது பற்றிய ஞாபகம் கூட வரவில்லை - இருந்தாலும் நான் புகை படம் நிறைய எடுத்திருக்க வேண்டும் - ( இன்னும் பல முறை அங்கு செல்ல வேண்டும் - )

பெங்களூர் வீட்டில் கப்லா என்ற விளையாட்டு - சிறிய குழந்தைகாளுக்கான விளையாட்டு - ஆனால் பெரியவர்களும் விளையாடலாம் - செவ்வக மர கட்டைகள் - அதை வைத்து என்ன வேண்டுமாலும் செய்யலாம் நான் செய்த உயரமான ...டவர்
லேபிள்கள்:
கர்நாடக கோவில்கள்,
பெங்களூர்,
விடுமுறை
புதன், 12 மே, 2010
ராக தேவன் இளைய ராஜாவும் என் அண்ணன் மகனும்

அண்மையில் என் அண்ணன் மகன் ரகு ( ராகவன் ) இளைய ராஜாவை சந்தித்து சிறிது உரையாடி மிகவும் மகிழ்ச்சியில் திளைக்கிறான்.
என்னுடைய பத்தாம் வகுப்பு காலத்தில் தான் அன்னக்கிளி வந்தது... கூடவே , பதினாறு வயதினிலே , சிகப்பு ரோஜாக்கள், காயத்திரி, கவிக்குயில் , கழுகு , பத்ரகாளி ... அப்பறம் கல்லூரி நாட்களில் , நிறம் மாறாத பூக்கள் , ராஜ பார்வை , டிக் டிக் டிக் , மூடு பனி .. அது ஒரு நீண்ட பட்டியல் .. ராஜாவின் பொற்க்காலம், முரளி , ராம ராஜன், ராஜ் கிரண்- இவர்களின் வளர்ச்சியில் ராஜாவின் பங்கு மிக பெரியது... அது போல எத்தனை எத்தனை தயாரிப்பாளர்கள் , ராஜாவினால் வெற்றிப்படம் கண்டார்கள் ...

என் அண்ணன் மகன், இசையில் மிக ஆர்வம் உள்ளவன், இசை பள்ளி அல்லது யாரிடமும் இசை கற்க வில்லை ... இசையை கேட்டு / கேட்டு ...படித்து ( புத்தகம் / நெட் ) இசையில் ஆழ்ந்த ஞானம் உண்டு ... ஓரளவுக்கு எல்லா ராகங்களும் தெரியும் ... எந்த சினிமா பாடல்களை கேட்டாலும் , அது இந்த ராகத்தில் வந்தது, ...அப்படி / இப்படி மணி கணக்கில் பேசுவான்.... கர்நாடக சங்கீதத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு , அப்படி இருந்தும் சினிமா பாடல்களிலும் மிக்க ஆர்வம் உண்டு. இளைய ராஜாவின் பரம் ரசிகன் / வெறியன் ... சென்ற வாரம் அவரை காண ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது , அது பற்றி அவனுடைய பதிவில் எழுதி இருக்கிறான்.
அது பற்றி அவனுடைய பதிவில் எழுதி இருக்கிறான்.
நான் பத்தாவது படிக்கும் பொழுது , கோட்டூர் புரத்தில் வசித்தோம், அப்பொழுது தான் எம்.ஜி. ஆர் , தன கட்சியை ஆரம்பித்து திண்டுகல்லில் ஜெயித்து ( மாயாண்டி தேவர் ), வளர்ந்து வரும் நேரம், . வெள்ளம் வந்து மக்கள் அவதி பட்டதால், ஆறுதல் சொல்ல வந்தா நேரம், எங்கள் வீட்டில் இருந்து கொஞ்ச தூரத்தில் உள்ள குடிசை பகுதிக்கு வந்திருந்தார், அவர் காரின் உள்ளே இருந்தார், அவருடைய பழக்கமான வேளை வேஷ்டி , சந்தன கலர் சட்டை ( அல்லது வெள்ளை சட்டையோ ????) ... கருப்பு கண்ணாடி, வெள்ளை காஷ்மீர தொப்பி .... ஆள் சும்மா , தக தகன்னு ஒரு மாதிரி ரோஸ் கலர் - பார்த்தவுடன் வசீகரிக்கும் தன்மை, இத்தனை ஆண்டுகள் கழிந்தும், இன்னும் மறக்க முடியாத சந்திப்பு ...அது போல என் அண்ணன் மகனுக்கு ஒரு மறக்க முடியாது அனுபவம்.

லேபிள்கள்:
இளைய ராஜா,
எம்.ஜி.ஆர்,
ரகு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
